“அற்புத மனிதர்கள்...” - ‘சந்திரமுகி 2’ படப்படிப்பை நிறைவு செய்த கங்கனா ரனாவத் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

நடிகை கங்கனா ரனாவத் ‘சந்திரமுகி 2’ படத்தில் தனக்கான படப்பிடிப்பு நிறைவு செய்துள்ளார். ‘‘அற்புதமான மனிதர்களிடமிருந்து விடைபெறுகிறேன்” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘‘இன்று ‘சந்திரமுகி 2’ படத்தில் என்னுடைய போர்ஷனுக்கான படப்பிடிப்பு முடிவடைகிறது. இங்கு நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களுக்கு விடைக்கொடுக்கிறேன் என்பது கடினமாகத்தான் உள்ளது.

இத்தனை நாட்களில் இதுவரை நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டருன் புகைப்படமே எடுக்கவில்லை. ஏனெனில், பெரும்பாலும் நாங்கள் படத்தின் காஸ்ட்யூமிலேதான் இருப்போம். அதனால், இன்று படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் இன்று வெற்றிகரமான இயக்குநராக, நடனக்கலைஞராக, நடிகராக, நல்ல மனிதராக வலம் வருகிறார். அவருடன் பணிபுரிந்தது எனக்குப் பெருமை. உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி’’ என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE