‘பூலோகம்’ படத்தை இயக்கிய என்.கல்யாண் கிருஷ்ணன் அடுத்து இயக்கியுள்ள படம், ‘அகிலன்’. ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் பற்றி நடிகர் ஜெயம் ரவி கூறும்போது, “இந்தப் படத்தின் கேரக்டர் எனக்குப் புதிதாக இருந்தது. இதுவரை இந்த மாதிரி கேரக்டர் பண்ணவில்லை. கொஞ்சம் எதிர்மறைத் தன்மை கொண்ட கதாபாத்திரம். துறைமுகப் பின்னணியில் கதை எழுதுவது கஷ்டமான விஷயம். அதை கல்யாண் கிருஷ்ணன் அருமையாகச் செய்திருக்கிறார். திரைக்கதை அழகாக இருக்கும். இந்தப் படத்துக்காக அதிக ரிஸ்க் எடுத்து நடுக்கடலில் சண்டைக் காட்சி எடுத்தோம். அது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். வரும் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது” என்றார்.