ரஜினியின் 170-வது படத்தை இயக்கும் ‘ஜெய்பீம்’ இயக்குநர் - அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ரஜினியின் 170-வது படத்தை இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக லைகா நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ரஜினியின் 170-வது படத்தின் பணிகள் இனிதே ஆரம்பமாகியுள்ளன. படத்தை ‘ஜெய்பீம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE