ஜாக்சன் துரை 2-ம் பாகத்துக்கு பிரிட்டிஷ் கால செட்!

By செய்திப்பிரிவு

சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி நடித்து கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம், ‘ஜாக்சன் துரை’. இதை பி.வி.தரணிதரன் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் 2ம் பாகம் இப்போது உருவாகிறது. படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் ஐ ட்ரீம் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதில், சத்யராஜ், சிபிராஜுடன் சம்யுக்தா, , மனிஷா ஐயர், சரத் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். 1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் பின்னணியில் கதை நடக்கிறது. பிரிட்டிஷ் கால கட்டத்தைக் கொண்டு வர, அக்காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் போல செட் அமைத்து படமாக்கவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE