பிரபல சின்னத்திரை இயக்குநர் தாய் செல்வம் காலமானார்

By செய்திப்பிரிவு

‘மெளனராகம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘ஈரமான ரோஜாவே 2’ ஆகிய சீரியல்களை இயக்கிய தாய் செல்வம் காலமானார்.

கடந்த 2009-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘நியூட்டனின் 3-ம் விதி’ படத்தை இயக்கியவர் தாய் செல்வம். அத்துடன் அவர் பல்வேறு சின்னத்திரை சீரியல்களையும் இயக்கி பிரபலமடைந்தவர். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ‘மௌனராகம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களை இயக்கியவர். தற்போது அவர், ‘ஈரமான ரோஜாவே 2’ என்ற தொடரை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் இன்று காலமானார். அவரது இறப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தனியார் தொலைகாட்சி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், “உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்” எனப் பதிவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE