திருமணம் முடிந்த கையோடு படப்பிடிப்புக்கு வரும் ஹன்சிகா

By செய்திப்பிரிவு

நடிகை ஹன்சிகா, தனது சிறு வயது நண்பர் சோஹைல் கத்தூரியாவை காதலித்து கடந்த 4ம் தேதி திருமணம் செய்துகொண்டார். ஜெய்ப்பூரில் 450 ஆண்டு பழமையான அரண்மனையில் அவர் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்கள் திருமணத்தை ஹாட்ஸ்டார் தளம் விரைவில் ஒளிபரப்ப இருக்கிறது.

திருமணம் முடிந்த கையோடு அவர் வெளிநாட்டுக்குத் தேனிலவு செல்ல இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் , அவர் படப்பிடிப்புக்காக சென்னை வருகிறார்.

ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார் ஹன்சிகா. இதில் 2 வேடத்தில் அவர் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக சென்னை வரும் அவர், அதை முடித்துவிட்டு, அடுத்த மாதம் தேனிலவு செல்ல இருக்கிறார். அவர் எந்த நாட்டுக்கு செல்கிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE