வெங்கட்பிரபு உடன் இணையும் நடிகர் சிவகார்த்திகேயன்

By செய்திப்பிரிவு

'டான்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'பிரின்ஸ்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படம் மற்றும் மண்டேலா இயக்குநர் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' என அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ளார்.

இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு உடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு உடன் இணைவதை உறுதிப்படுத்தினார்.

'மாநாடு' படம் வெளியான சமயத்திலேயே வெங்கட் பிரபு உடன் சிவா இணைய பேச்சுவார்த்தை நடந்துவந்தது. அந்த சமயத்தில் இருவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியதால் அந்தப் படங்களை முடித்துவிட்டு இருவரும் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.

வெங்கட் பிரபு இப்போது நாகசைதன்யாவை ஹீரோவாக வைத்து தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பூஜையிலும் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். இருவரும் தங்களின் கமிட்மென்ட்களை முடித்த பின்னர் இணையலாம் என்றும், அந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தயாரிக்கலாம் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இது உறுதி என்கிற பட்சத்தில் தமிழ் சினிமாவில் புதிய காம்போவில் ஒரு சினிமா பார்க்கலாம். எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE