தனுஷின் ‘நானே வருவேன்’ செப்.30-ல் வெளியாக வாய்ப்பு

By செய்திப்பிரிவு

தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

'மயக்கம் என்ன' படத்தைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணையும் படம் 'நானே வருவேன்'. செல்வராகவன் இயக்கும் இப்படத்தை தாணு தயாரிக்கிறார். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ளார். தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் செல்வராகவனும் நடித்துள்ளார்.

இந்நிலையில், படத்தை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE