2 நாட்களில் ரூ.20 கோடி வசூலித்த தனுஷின் திருச்சிற்றம்பலம்

By செய்திப்பிரிவு

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் 2 நாட்களில் ரூ.20 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'யாரடி நீ மோகினி','உத்தமவில்லன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் தனுஷூடன் இணைந்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையைமத்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

உலகளவில் 600 திரையரங்குகளில் வெளியான இப்படம் நேர்மறையான விமர்சனங்களைப்பெற்றது. இதனால் படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாள் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. இதனால் இரண்டாவது நாள் ரூ.11 கோடியை படம் வசூலித்துள்ளது.

அதன்படி படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் ரூ.20 கோடி வசூலை 'திருச்சிற்றம்பலம்' எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE