''வாழ்க்கை ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்'' - புதுவீடு குறித்து அனிதா சம்பத் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

''வாழ்க்கை ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்'' என தான் புது வீட்டில் குடியேறியது குறித்து அனிதா சம்பத் நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செய்தியவாசிப்பளாராக இருந்த அனிதா சம்பத், திரைத்துறைக்குள் நுழைந்து சில படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியராக நுழைந்து பிரபலமடைந்தார். இந்நிலையில், தங்களின் சொந்த வீடு வாங்கும் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக கூறி, கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இது தொடர்பாக அவர், ''Finally! வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா..பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு.

.ஓட்டு வீடுல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான்.இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம் “நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்”. இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன்'' என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE