'எதற்கும் துணிந்தவன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' வரும் பிப்ரவரி 4 அன்று வெளியாகவுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் இப்படத்தை வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தற்போது இப்படத்தை வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் படக்குழு இன்று (நவ.19) வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE