ஜீவா - மிர்ச்சி சிவா இணையும் கோல்மால்

By செய்திப்பிரிவு

ஜீவா, மிர்ச்சி சிவா மீண்டும் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'கோல்மால்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கலகலப்பு 2'. இதில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2018-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படமொன்றில் ஜீவா, மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கவுள்ளனர்.

இதனை பொன் குமரன் இயக்கவுள்ளார். 'லிங்கா' படத்தின் கதாசிரியராக இவர் தான். மேலும், ப்ரியாமணி நடிப்பில் தமிழ் - கன்னட மொழியில் வெளியான 'சாருலதா' படத்தை இயக்கியிருந்தார். தற்போது 'கோல்மால்' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கவுள்ளார்.

இதில் ஜீவா, மிர்ச்சி சிவா, பாயல் ராஜ்புட், தான்யா ஹோப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுக்கவே மொர்ரிசீயஸ் நாட்டில் நடைபெறவுள்ளது.

நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. முழுக்கவே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் தயாராகிறது.

'கோல்மால்' படத்தின் பூஜை சென்னையில் இன்று (அக்டோபர் 10) காலை நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சரவணன், இசையமைப்பாளராக அருள் தேவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE