எக்மோ உதவியுடன் எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 19) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டு எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள், தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவர் வெண்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) மற்றும் எக்மோ (ECMO) கருவிகள் உதவியுடன் இருந்து வருகிறார்.
» தனுஷுடன் நடித்த 'ராஞ்ஜனா' திரைப்படத்தின் குறைகள் இவை: அபய் தியோல் பதிவு
» சிரிச்ச முகத்தோட திரும்ப வந்து எங்களுக்காக பாடனும் எஸ்.பி.பி சார்: சூரி உருக்கம்
அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலை இந்த நேரம் வரை திருப்திகரமான நிலையில் உள்ளது"
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.