ரசிகர்களுக்கு என் இசையை பரிசாக அளிக்கிறேன்: இளையராஜா

ரசிகர்களுக்கு என் இசையை பரிசாக அளிக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த நாள் செய்தியாக தெரிவித்தார்.

இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் தனது ரசிகர்கள், பாடகர்கள் என யாரையுமே இளையராஜா சந்திக்கவில்லை.

இன்று (7/06/2015) அவரது ரசிகர்கள், அவருடைய குழுவில் உள்ள பாடகர்கள் என அனைவருமே குடும்பத்துடன் இளையராஜாவை சந்தித்தார்கள். அவர்கள் அனைவருடனும் இளையராஜா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இளையராஜாவின் ஸ்டூடியோவில் 1980களில் வந்த பாடல்களை பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த இளையராஜா, "ரசிகர்களுக்கு என் இசையை பரிசாக அளிக்கிறேன்" என்பதை பிறந்த நாள் செய்தியாக தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE