தொடங்கியது அரண்மனை 2 படப்பிடிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா நடிப்பில் உருவாகும்'அரண்மனை 2' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

வினய், சந்தானம், ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் 'அரண்மனை'. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

'அரண்மனை' படத்தைத் தொடர்ந்து 'ஆம்பள' படத்தை இயக்கினார் சுந்தர்.சி. ’அரண்மனை’யின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பேய் + காமெடி கூட்டணியில் 'அரண்மனை 2' படத்திற்கு திட்டமிட்டார்கள். அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை குஷ்பு தயாரிக்கிறார்.

சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி உள்ளிட்ட பலர் ’அரண்மனை 2’ படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில், சென்னையில் இன்று முதல் ’அரண்மனை 2’ படத்தின் படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. சூரி சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளோடு படப்பிடிப்பு துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE