'அலைபாயுதே' படத்தின் மூலமாக தனக்கு ஒரு அறிமுகம் கொடுத்ததற்காக மாதவன் அனுப்பிய நீண்ட இ-மெயிலுக்கு இயக்குநர் மணிரத்னம் அனுப்பிய பதில் என்ன தெரியுமா?
மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி, அரவிந்த்சாமி, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அலைபாயுதே'. 2000ம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்தின் இ-மெயில் முகவரிக்கு நன்றி தெரிவித்து மிக நீண்ட இ-மெயில் ஒன்றை அனுப்பினார் மாதவன்.
கடந்த காலம், முந்தைய காலம், அதற்கு முந்தைய காலம், தற்போதைய நிலை, எதிர்கால நிலை, அலைபாயுதே அனுபவம், 'மணி சாரிடம்' கற்றுக்கொண்ட பாடங்கள்... இப்படி பல உப தலைப்புகளில் பக்கம் பக்கமாக எழுதி அனுப்பினராம் மாதவன்.
மாதவனின் இ-மெயிலுக்கு மணிரத்னத்திடம் இருந்து வந்த பதில் மெயில் இதுதான்:
"அந்த படத்துக்கு நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று நினைத்தேன். அதற்காக உங்களை தேர்வு செய்தேன். இதன் மூலம் நான் உங்களுக்கு பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. இதற்கு நீங்கள் நன்றித் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்."
மிகப் பெரிய நெகிழ்ச்சியான ரியாக்ஷன் கிடைக்கும் என்று காத்திருந்த மாதவனுக்கு கிடைத்த மகிழ்ச்சியான பல்பு இது.
பேசுவதில் ரீலில் மட்டுமல்ல... ரியலிலும் மணி மினிதான்!
முந்தைய பாகம்:>அறுந்த ரீலு 7: 'லிங்கா' அணையும் 'ரிவர்ஸ்' சிந்தனையும்!