கோவை ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா பீடத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென நேற்று வருகை தந்தார்.
கோவை மாவட்டம், கேரள எல்லையை ஒட்டியுள்ள ஆர்ஷ வித்யா பீடம், புகழ்பெற்ற ஆன்மிக மையமாக விளங்கி வருகிறது. ஆசிரமத்தின் குருவாக இருந்து வரும் தயானந்த சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற பக்தர்கள் வந்து செல்வது உண்டு.
இந்நிலையில், கோவைக்கு விமானம் மூலமாக சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று காலை நடிகர் ரஜினிகாந்த் வந்தார். பின்னர், கார் மூலமாக ஆனைகட்டிக்குச் சென்ற அவர், ஆர்ஷ வித்யா பீடத்தில் தயானந்த சரஸ்வதி சுவாமியைச் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர், அவருடன் உரையாடினார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட ரஜினிகாந்த், விமானம் மூலமாக மாலை 3.20 மணிக்கு சென்னை புறப்பட்டுச் சென்றார். கோவைக்கு திடீரென ரஜினிகாந்த் வந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், விமான நிலையம், ஆனைகட்டி பகுதிகளில் அவரைக் காண திரண்டனர்.