மே 29-ல் வெளியாகிறது மாஸ்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'மாஸ்' திரைப்படம் மே 29ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் 'மாஸ்'. நயன்தாரா, ப்ரணீதா, சமுத்திரக்கனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் சூர்யாவோடு நடித்திருக்கிறார்கள். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து இருக்கிறார்.

மே 1ம் தேதி இப்படத்தை வெளியிட முதலில் தீர்மானம் செய்தார்கள். ஆனால், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் மே 15ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.

கிராபிக்ஸ் பணிகள் திட்டமிட்டப்படி முடிவடையாத காரணத்தால், தற்போது மே 29ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். இத்தகவலை சூர்யா தனது ட்விட்டர் தளம் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மே 8ம் தேதி யுவன் இசையில் வெளியான 'மாஸ்' பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE