என்கவுன்ட்டர் நடந்த இடத்துக்கு அருகே ‘புலி’ படப்படிப்பு

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய் நடித்து வரும் ‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹாசன், விஜய் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை படமாக்கப் பட்டன. அதே நாளில் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் என் கவுன்ட்டரில் தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் 20 பேர் பலியாயினர்.

அன்றைய தினம் மாலை படப் படிப்பை முடித்துக் கொண்டு திருப்பதிக்கு திரும்பி வந்து கொண் டிருந்த படப்படிப்பு குழுவினர், தலகோனா பகுதி உட்பட பல இடங்களில் தீவிர வாகன சோதனை நடப்பதை அறிந்து விசாரித்தனர். அப்போது படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் என்கவுன்ட்டர் நடந்தது தெரியவந்தது. இதை அறிந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE