மீண்டும் இணையும் பண்ணையாரும் பத்மினியும் குழு

'பண்ணையாரும் பத்மினியும்' பட இயக்குநர் அருண்குமார் இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார்.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடிக்க, அருண்குமார் இயக்கத்தில் வெளியான படம் 'பண்ணையாரும் பத்மினியும்'. இப்படம் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும், வசூலில் போதிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் அருண்குமார் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இப்படத்தை ஷான் சுதர்ஷன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

காக்கிச்சட்டைக்கு உரிய கம்பீரத்தையும், நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு போலீஸ்காரனின் யதார்த்த கதைதான் இந்தப்படம். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க இருக்கிறார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு முடிந்த உடன், விரைவில் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE