முதலில் கார்த்தி அப்புறம் விஷால்: களமிறங்கும் லிங்குசாமி

2015ம் ஆண்டு தொடக்கத்தில் முதலில் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கிவிட்டு, அதனைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி

சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் 'அஞ்சான்'. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இணையத்தில் பலரும் லிங்குசாமியை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து வெற்றிப் படம் ஒன்று கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கதை எழுத ஆரம்பித்தார் லிங்குசாமி. முதலில் கார்த்தி படத்தை இயக்குவார் என்று லிங்குசாமி தரப்பில் தகவல் வெளியானது.

ஆனால், மீண்டும் லிங்குசாமியுடன் இணைந்து 'சண்டக்கோழி 2' பண்ண இருக்கிறோம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனால் விஷால் படத்தை முடித்துவிட்டு தான் கார்த்தி படத்தை இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், 2015ம் ஆண்டு தொடக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தை லிங்குசாமி இயக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்தே விஷால் நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

'எண்ணி 7 நாள்' என்று முதலில் தலைப்பிடப்பட்ட கார்த்தி படத்திற்கு தற்போது பெயர் மாற்றம் செய்ய இருக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் 'காஷ்மோரா' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, லிங்குசாமி படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்