கத்தி ரிலீஸ் எப்போது?- விரைவில் முடிவு அறிவிப்பதாக அபிராமி ராமநாதன் தகவல்

By செய்திப்பிரிவு

திரையரங்குகளில் கத்தி திரைப்படத்தை ரிலீஸ் செவய்வது குறித்து, இன்னும் ஒரு சில மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என சென்னை திரைப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கத்தி. இத்திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் இப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

'கத்தி' படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்தது. நாளை காலை முதல் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டும் என்று படக்குழு நேற்றிரவு (அக்.20) அறிவித்தது.

ஆனால், நேற்றிரவே 'கத்தி' திரைப்படம் வெளியாக இருந்த சத்யம் திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம் ஆகியவை மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை திரைப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. கத்தி திரைப்பட ரிலீஸ் குறித்து 12 மணிக்குள் முடிவு எட்டப்படும் என அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE