பாலிவுட் போகும் அட்லீ

தனது அடுத்த தமிழ்ப் படத்திற்குப் பிறகு, ‘ராஜா ராணி’ படத்தை இந்தியில் இயக்கவிருக்கிறார் இயக்குநர் அட்லீ.

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனநராக அறிமுகமானார் அட்லீ. இயக்குநர் ஷங்கரிடம் வேலை செய்து வந்தவர், ஆர்யா, ஜெய், நயன் தாரா, நஸ்ரியா நடிக்க ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார்.

மக்களிடையே வரவேற்பைப் பெற்ற ‘ராஜா ராணி’, நயன் தாராவுக்கு ஒரு மறுவரவுப் படமாக அமைந்தது. இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட்டார்கள்.

தன் அடுத்த பட வேலைகளில் இருக்கும் அட்லி, அந்த படத்தை முடித்த பின்னர் ‘ராஜா ராணி’ படத்தை இந்தியில் இயக்க திட்டமிட்டிருக்கிறார். இந்தியின் முன்னணி நாயகர், நாயகிகள் இப்படத்தில் நடிக்க அணுக இருக்கிறார்கள்.

முன்னதாக, இயக்குநர் ஷங்கர் ‘முதல்வன்’ படத்தை இந்தியில் இயக்கினார். குருவின் வழியில் தானும் இந்தித் திரையுலகில் நுழைய திட்டமிட்டிருக்கிறார் அட்லீ.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE