சந்தானத்துடன் நடிக்க கவுண்டமணியுடன் பேச்சுவார்த்தை

By ஸ்கிரீனன்

கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கவுண்டமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

'தில்லுக்கு துட்டு 2' படத்தைத் தொடர்ந்து 'A 1', ’டகால்டி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம். இதில் 'A 1' படம் தான் முதல் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சந்தானம்.

இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கவுண்டமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர் நடிக்க ஒப்புக் கொண்டாரா, இல்லையா என்பது விரைவில் தெரியவரும். இது தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரித்த போது அவர்களும் இதை உறுதிப்படுத்தினார்கள்.

படத்தை இயக்குவதோடு மட்டுமன்றி, மசாலா பிக்ஸ் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார் ஆர்.கண்ணன். அவரோடு இணைந்து எம்ஆர்கேபி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் காமெடி கலந்த படமாக இது உருவாகிறது.

ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள். நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்