‘படைப்பு சுதந்திரத்தோடு ஒரு படம் வெளிவருவது முக்கியம்’ - த.செ.ஞானவேல்

By செய்திப்பிரிவு

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘வேட்டையன்’. லைகா தயாரித்துள்ளது. த.செ.ஞானவேல் இயக்கிய இந்தப் படம் 10-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் ‘சக்சஸ் மீட்’ சென்னையில் நடந்தது.

இயக்குநர் த.செ.ஞானவேல் பேசும் போது, “என் மீது நம்பிக்கை வைத்து, கதையம்சம் உள்ள படம் பண்ண வேண்டும் என்று ஆர்வத்தோடு என்னை இந்தப் படத்துக்குள் கொண்டு வந்த ரஜினிகாந்துக்கு நன்றி. ‘ஜெயிலர்’ ஹிட்டுக்கு பிறகு இப்படியொரு படம் பண்ணுவதற்கு தைரியம் வேண்டும். அதுதான் அவரை சூப்பர் ஸ்டாராக வைத்திருக்கிறது.

‘அந்த ஹிட் எனக்கு அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது, நான் என் கதையைப் பண்ண வேண்டும் என விரும்புகிறேன்’ என்று சொன்னேன். அவர் ஏற்றுக் கொண்டு படம் முடியும்வரை ஆதரவு கொடுத்தார்.

இதை இயக்குவதற்கு முழு சுதந்திரம் கொடுத்த லைகா நிறுவனத்துக்கும் நன்றி. படைப்பு சுதந்திரத்தோடு ஒரு படம் வெளிவருவது ரொம்ப முக்கியம். இன்று வரை படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது மாறியதில் சந்தோஷம்” என்றார்.

நடிகை ரித்திகா சிங், ஒளிப்பதிவாளர் கதிர் உட்பட படக் குழுவினர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்