‘சாரி நோ கமென்ட்ஸ்’ - திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ரஜினிகாந்த்

By செய்திப்பிரிவு

சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு, “சாரி நோ கமென்ட்ஸ்” என நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “வேட்டையன் திரைப்படத்துக்கு மக்களிடையே நிறைய எதிர்பார்ப்பு உண்டு. படம் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். ‘தர்பார்’ படத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இது வித்தியாசமாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து அவரிடம், “நீங்கள் மிகப்பெரிய ஆன்மிகவாதி, திருப்பதி லட்டு விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சாரி, நோ கமென்ட்ஸ்” என்று பதிலளித்தார். த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்