‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்குப் பிறகு ராகவா லாரன்ஸ், ‘துர்கா’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரது 25-வது படத்தைத் தெலுங்கில் ராக்ஷசடு, கில்லாடி படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார்.
ஏ ஸ்டூடியோஸ் எல்எல்பி சார்பில் கோனேரு சத்யநாராயணா, நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யநாராயணாவும் ரமேஷ் வர்மாவும் இணையும் 3-வது படம் இது.
‘மிகப்பெரிய ஆக்ஷன் அட்வென்சர் ஆரம்பம்' என்ற போஸ்டருடன் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகும் இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது.