திகிலான மேக்கிங்: அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஹாரர் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - கிராஃபிக்ஸ், செட், பின்னணி இசை ஆகியவை திகில் உணர்வை காட்சிகளின் வழியே கட்டமைக்கின்றன. அடுத்தடுத்து நகரும் காட்சிகள் மர்மங்களுடன் கடக்கின்றன. சாம் சிஎஸ் தனது இசையால் கூடுதலாக அச்சுறுத்துகிறார். கலர் டோன், அருள்நிதியுடன் ஏற்படும் மாற்றங்கள் கவனிக்க வைக்கின்றன. ட்ரெய்லர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிமான்டி காலனி 2: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 9 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம்.சிஎஸ் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE