இந்தோனேசிய நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது ‘சங்கமித்ரா’

By செய்திப்பிரிவு

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உட்பட பலர்நடிப்பில் அறிவிக்கப்பட்ட படம்,‘சங்கமித்ரா’. 2017-ம் ஆண்டு கேன்ஸ் படவிழாவில் இதன் போஸ்டருடன் கூடிய அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன், ஜெயம் ரவி விலகினர். இதையடுத்து விஷால், ஆர்யா, திஷா பதானி நடிப்பதாகக் கூறப்பட்டது.

இந்தப் படம் விரைவில் உருவாகும் என்று சில வருடங்களாகக் கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், இந்த ஆண்டு இறுதியில் ‘சங்கமித்ரா’ தொடங்கும் என்று சுந்தர்.சி கூறியிருந்தார். இந்தப் படத்தை இந்தோனேசிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள். முன்பு அறிவிக்கப்பட்ட அதே நடிகர், நடிகைகள் நடிக்க வாய்ப்பில்லை என்றும் வேறு நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், ஹரிபாஸ்கர், லாஸ்லியா நடிப்பில், ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பர்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE