சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை!

By செய்திப்பிரிவு

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சந்தோஷ் நாராயணனின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ‘புறநானூறு படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது’ என படக்குழு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. இதில் நடிக்க உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களின் மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரம் அந்தமானில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE