உண்மை சம்பவ பின்னணியில் ‘ஒரு நொடி’

By செய்திப்பிரிவு

சென்னை: தமன்குமார் நாயகனாக நடித்துள்ள படம், ‘ஒரு நொடி'. மணிவர்மன் இயக்கியுள்ள இதில் எம்.எஸ்.பாஸ்கர், நிகிதா கிரிஷ், வேல.ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார். மதுரை அழகர் மூவிஸ், ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பில் அழகர் ஜி, கே.ஜி.ரத்தீஷ் தயாரித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் மணிவர்மன் கூறும்போது, “ஒரு நொடியில், நடந்த சம்பவம் தான் இந்தப் படத்தின் கதை. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்த தணிக்கை குழு, 'நாங்கள் பார்த்த திரில்லர் படங்களில் ‘ஒரு நொடி’ வித்தியாசமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் யூகிக்கவே முடியவில்லை. அற்புதமான படைப்பு' என்றனர். இது எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது. ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE