தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்: ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சரண் போட்டியின்றி தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு முறை தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது வழக்கம். தற்போதைய தலைவரான ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

இதையடுத்து, 2024-2026-ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கெனவே கூறிவிட்டார். இதனால் ஏற்கெனவே செயலாளராக இருந்த ஆர்.வி.உதயகுமார் தலைவராகவும், பொருளாளராக இருந்த பேரரசு செயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாளராக சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE