ஆக்‌ஷன் படம் இயக்குகிறார் ஸ்டன்ட் சில்வா

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல ஸ்டன்ட் இயக்குநர், ஸ்டன்ட் சில்வா. இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, சிங்களம் என பல மொழிகளிலும் 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநராகப் பணியாற்றி உள்ளார். இவர், இப்போது மிரட்டலான ஆக்‌ஷன் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடித்த 'எமதொங்கா' என்ற படம் மூலம் ஸ்டன்ட் இயக்குநர் ஆனேன். தொடர்ந்து படங்களில் பணியாற்றி வருகிறேன். வில்லனாகவும் நடித்து வருகிறேன். சமீபத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியான 'மிஷன் சாப்டர் 1' படத்தில் நூற்றுக் கணக்கான ஸ்டன்ட் நடிகர்களை வைத்து நான் அமைத் திருந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. சமுத்திரக்கனி, சாய் பல்லவியின் தங்கை பூஜா நடிப்பில் 2022-ம்ஆண்டு 'சித்திரை செவ்வானம்' என்ற படத்தை இயக்கினேன். இதில் சமூகத்தில் பெண் பிள்ளைகளை எப்படி பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றும் சோஷியல் மீடியாவை எப்படி கையாளவேண்டும் என்றும் சொல்லி இருந்தேன். இப்போது பிரம்மாண்டமான அதிரடி ஆக் ஷன் படத்தை இயக்க இருக்கிறேன். இதுபற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன். இவ்வாறு ஸ்டன்ட் சில்வா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE