இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் தோற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராஜூமுருகனின் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘பராரி’ என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது. திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும், சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமகால அவலங்களை இந்தப் படம் பேசுகிறது என படக்குழவினர் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள், பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 45 நாட்களுக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. இப்படத்தில் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
‘பரியேரும் பெருமாள்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE