அஜித்தோடு நான் நடித்து வரும் படம் கண்டிப்பாக பட்டைய கிளப்பும் என்று அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் கெளதம்மேனன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. த்ரிஷா சென்னை திரும்பிய பின், அஜித் - த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளைக் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.
இப்படத்தில் அருண் விஜய் அஜித்திற்கு வில்லனாக நடித்து வருகிறார். இதனை விருதுகள் வழங்கும் விழாவில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உறுதி செய்தார். ஆனால் அருண் விஜய் தான் நடித்து வரும் வேடம் குறித்து எதுவுமே தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் அருண்விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், " கெளதம் சார் படத்தில் நான் என்ன வேடத்தில் நடித்து வருகிறேன் என்பதை விளக்கி கூற முடியாது. ஆனால் கண்டிப்பாக ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், சமீபத்தில் தயாரிப்பாளர் ரத்னம் விருது வழங்கும் விழாவில் என்னுடைய வேடம் குறித்து கூறினார். அந்த அரங்கமே சத்தமிட்டதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அஜித் சார் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். "இப்படம் கண்டிப்பாக பட்டைய கிளப்பும்"" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
35 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago