சென்னை திரும்பினார் ரஜினி

By செய்திப்பிரிவு

‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது.

இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர். அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், ரஜினி 170 படத்தின் படப்பிடிப்பின் இடையே ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதோடு மும்பை படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தும் சென்னை திரும்பினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE