ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்

By செய்திப்பிரிவு

சென்னை: ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு நயன்தாராவும் ஜெயம் ரவியும் இதில் மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இதனை இயக்கியுள்ளார்.

ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் வரும் செப்.28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. டார்க் ஆன சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘இறைவன்’ படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்துடன் 2 மணி நேரம் 33 நிமிடங்கள் ஓடும் படத்தில் இரண்டு இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகளை நீக்கவும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமீர் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான ’ஆதி பகவன்’ படத்துக்குப் பிறகு ‘ஏ’ சான்றிதழ் பெறும் ஜெயம் ரவி படம் இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்