‘தனி ஒருவன் 2’ படத்திலும் நயன்தாரா?

By செய்திப்பிரிவு

சென்னை: மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து, 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். அரவிந்த் சாமி வில்லனாக மிரட்டியிருந்தார். தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

இந்தப்படம் வெளியாகி 28-ம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்று இந்தப் படத்தின் 2-ம் பாகத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் 2-ம் பாகத்திலும் நயன்தாராவே நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. வில்லனாக நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேசி வருவதாகவும் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE