உலக அளவில் ரூ.500 கோடி வசூலித்து முன்னேறும் ‘ஜெயிலர்’

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.500 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆஃபீஸில் முன்னேறி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுவருகிறது. வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

படம் வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.375 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி 11 நாள் ஆன நிலையில், இதுவரை உலக அளவில் ரூ.500 கோடியை வசூலித்துதள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ‘2.0’ படத்துக்குப் பிறகு ரஜினியின் இரண்டாவது ரூ.500 கோடி க்ளப் இது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE