மீண்டும் இணைகிறது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ கூட்டணி

By செய்திப்பிரிவு

சென்னை: ‘கேப்டன் மில்லர்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடிக்கிறார். இப்படத்துக்குப் பிறகு தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இப்படத்துக்குப் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தின் பணிகள் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE