விஜய்க்கு கதை சொல்வேன்; அது சிறந்த படமாக இருக்கும் - கார்த்திக் சுப்பராஜ்

By செய்திப்பிரிவு

சென்னை: “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் முடிந்த பிறகு நிச்சயம் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொல்வேன். இது அவரது படங்களில் சிறந்த படமாக இருக்கும்” என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

'பீட்சா’ படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் காத்திக் சுப்பாராஜ். இப்போது ‘ஜிகிர்தண்டா’ படத்தின் இரண்டாவது பாகமான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த நிலையில், ‘ஜிகர்தண்டா’ படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில் படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்து இதன் கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது.

இதில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசும்போது,“நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எப்போதுமே என் விருப்பம். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் முடிந்த பிறகு நிச்சயம் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொல்வேன். இது அவரது படங்களில் சிறந்த படமாக இருக்கும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE