“இன்னும் படத்திலிருந்து மீளவில்லை” - ‘மாமன்னன்’ படத்தை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ் 

By செய்திப்பிரிவு

சென்னை: “படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை” என மாரிசெல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது தாமதம் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் ‘மாமன்னன்’ சிறப்பான திரைப்படம். அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. உதயநிதி, மாரிசெல்வராஜ், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்த திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த திரைப்படம்.35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம் இதுவரை சுமார் 62 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கடந்த 27 ஆம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE