‘சந்திரமுகி 2’ டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் வடிவேலு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘சந்திரமுகி 2’ படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை வடிவேலு நிறைவு செய்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், படத்தில் வடிவேலு தனது முருகேசன் கதாபாத்திரத்துக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக சிறிய விடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இறுதிகட்ட பணிகள் முடிந்து வரும் செப். 15ஆம் தேதி ‘சந்திரமுகி 2’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE