ரூ.50 கோடி வசூல் உடன் முன்னேறும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’

By செய்திப்பிரிவு

சிவகார்த்தியேன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

மடோன் அஸ்வினின் முந்தைய படமான ’மண்டேலா’ வித்தியாசமான கதைக்களத்துடன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.30.4 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது படம் வெளியாகி 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படம் இந்த ஆண்டில் ‘வாரிசு’, ‘துணிவு’, ‘பொன்னியின் செல்வன் 2’ படங்களுக்குப் பிறகு அதிக வசூலை ஈர்த்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. வாசிக்க > மாவீரன் விமர்சனம்: மாவீரன் Review: அதகளமும் அக்கறையும் நிறைந்த களத்தில் நிகழ்த்தப்பட்டதா பாய்ச்சல்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE