ஒரே இரவில் நடக்கும் திகில் படம் ‘சிங்க்’

By செய்திப்பிரிவு

சென்னை: அறிமுக இயக்குநர் விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் இயக்கியுள்ள படம்,'சிங்க்'. இதில், ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்த கிஷன் தாஸ் நடிக்கிறார். மோனிகா சின்னகோட்லா நாயகியாக நடிக்கிறார். சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சிவராம் பி.கே. ஒளிப்பதிவு செய்கிறார். அபிஜித் ராமசாமி இசையமைக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் கூறும்போது, ​​“இது ‘கிரவுட் பண்டி’ல் உருவான படம். திகில் படம் என்றாலும் வழக்கமானதாக இருக்காது. திரைக்கதையை வித்தியாசமான முறையில் அமைத்துள்ளோம். விபத்து ஒன்றை ஏற்படுத்திவிட்டு நண்பர்களுடன் அதை மூடி மறைக்கிறார் நாயகன். பிறகு வீடியோ காலில் 4 நண்பர்கள் பேசத் தொடங்குகிறார்கள். அதில் என்ன நடக்கிறது என்று கதை செல்லும். மொத்தப் படப்பிடிப்பையும் 15 நாட்களில் முடித்தோம். ஒரே இரவில் நடக்கும் கதை" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE