அருள்நிதியின் 'டிமான்ட்டி காலனி 2' செப்டம்பரில் ரிலீஸ்: மேக்கிங் வீடியோ வெளியீடு

By செய்திப்பிரிவு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பை பெற்றது. 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

‘கோப்ரா’ படத்துக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி 61 நாட்களில் ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தது.

இந்நிலையில், படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகியுள்ளது. வீடியோவை பொறுத்தவரை படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. சில வித்தியாசமான முயற்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகின்றன. வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE