ஹைபர்லிங்க் கிரைம் த்ரில்லரில் கற்பனை கதாபாத்திரம்

By செய்திப்பிரிவு

அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், ஸ்வேதா டோரதி, ஜான் விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா உட்பட பலர் நடிக்கும் படத்தை, டிரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் வொயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் கே.சசிகுமார் தயாரிக்கிறார். என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். அஜீஸ் இசை அமைக்கிறார். ஹைபர்லிங்க் கிரைம் த்ரில்லராக உருவாகும், இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் பற்றி இயக்குநர் சகோ கணேசன் கூறியதாவது:

ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஒருவரை, அவருக்கு வேண்டிய சிலர் தனித்தனியாக கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள். திடீரென்று அவர் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? எதற்காகக் கொல்லப்பட்டார் என்பது கதை. ஒவ்வொரு காட்சியும் த்ரில்லிங்காக செல்லும். கூடவே, ஜாலியான விஷயங்களும் இருக்கும். மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லர் படம். இதில் காதல் காட்சிகள் இருக்காது. சந்தோஷ் பிரதாப் கற்பனை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் என்ன செய்கிறார் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

அம்பத்தூரில் உள்ள இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தி னோம். பெரும் நட்சத்திரப் பட்டாளம் இதில் இருக்கிறது. அனைவரும் பிசியான நடிகர்கள். இதில் போட்டி போட்டு நடித்துள்ளனர். முதல் ஷெட்யூல் முடிந்துள்ளது. இவ்வாறு சகோ கணேசன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE