பாடகர் சங்கர் மகாதேவனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன். இவர் தமிழில், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்ற, ‘என்ன சொல்லப் போகிறாய்’, சங்கமம் படத்தில் ‘வராஹ நதிக்கரையோரம்’, ராவணன் படத்தில் ‘காட்டுச் சிறுக்கி’, உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் பாடியுள்ள இவர், தனது நண்பர்கள் எசான், லாய் ஆகியோருடன் இணைந்து இசை அமைத்தும் வருகிறார். தமிழில், ‘ஆளவந்தான்’, ‘விஸ்வரூபம்’ படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவருக்கு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரப் பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது. இசை மற்றும் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்ததற்காக இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE