சிவகார்த்திகேயன் இல்லாமல் காஷ்மீரில் தொடங்கிய ‘எஸ்கே 21’ படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் இல்லாமல் காஷ்மீரில் ‘எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ‘மாவீரன்’ படப் பணிகளில் பிஸியாக இருக்கும் விரைவில் காஷ்மீர் சென்று படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

‘பிரின்ஸ்’ படத்தின் தோல்விக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ‘மாவீரன்’ படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. அதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் ‘அயலான்’ இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்தியேகன் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ‘எஸ்கே 21’ என அழைக்கப்படும் இப்படத்தில் சாய் பல்லவியும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 5-ம் தேதி பிரம்மாண்ட விழாவுடன் தொடங்கியது. ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கும் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆனால், இந்தப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவில்லை. ‘மாவீரன்’படப் பணிகளில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்த வார இறுதியில் காஷ்மீர் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 14-ம் தேதி ‘மாவீரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE