பிரபாஸின் ‘சலார்’ ரிலீஸ் தள்ளிவைப்பு? - தேதியை உறுதி செய்த படக்குழு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு மீண்டும் உறுதி செய்துள்ளது. படத்தின் ரிலீஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் படக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமானப் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், செப். 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.

’சலார்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாததால் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் படக்குழு இந்த தகவலை மறுத்து ‘சலார்’ வெளியீட்டுத் தேதியை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது. வெளியீட்டுத் தேதியில் எந்தவித மாற்றமுல் இலலை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE